ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

by Staff / 06-08-2023 01:58:18pm
ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறிய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் கடை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சேதமதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via