மணிப்பூர் கலவரம் - கூடுதல் ராணுவம் குவிப்பு

by Staff / 07-08-2023 04:13:38pm
மணிப்பூர் கலவரம் - கூடுதல் ராணுவம் குவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த சில நாட்களாக அங்கு கலவரம் கொழுந்து விட்டு எரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால், பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்களை கட்டுப்படுத்தி துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 800 வீரர்களை கொண்ட கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via