மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு .

by Staff / 10-08-2023 12:10:19pm
மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு .

மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வந்த நிலையில், மாநிலமே முடங்கி கிடந்தது. இதனால் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கலவரம் சற்று குறைய தொடங்கிய நிலையில் இன்று முதல் மணிப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் இன்று (ஆகஸ்ட் 10) திறக்கவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via