போலீசார் பறிமுதல் செய்த 577 கிலோ கஞ்சா அழிப்பு

by Staff / 12-08-2023 02:43:42pm
போலீசார் பறிமுதல் செய்த 577 கிலோ கஞ்சா அழிப்பு

கோவை மேற்கு மண்டல பகுதியில் போலீசாரின் பல்வேறு சோதனைகள் மூலம் சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டு சமூக விரோதிகளால் விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 577 கிலோ எடையுள்ள போதை பொருட்களான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்து இருந்தனர். கோர்ட்டு உத்தரவின்பேரில் சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் போலீசார் பறிமுதல் செய்த 577 கிலோ கஞ்சா நேற்று எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிலையத்தில் அழிக்கப்பட்டது. கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ. ஜி. பவானீஸ்வரி முன்னிலையில் கஞ்சா அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் போலீஸ் டி. ஐ. ஜி. ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், திருப்பூர் மாநகர துணை கமிஷனர் ஆசைதம்பி, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே கோவை மேற்கு மண்டல கஞ்சா அழிப்பு கமிட்டி உறுப்பினரும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான சிவக்குமார் கூறுகையில், கோவை மேற்கு மண்டலத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 577 கிலோ நேற்று அழிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via