சொந்த பைக்கை திருடிய போதை ஆசாமி
சென்னையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலரை, அதன் உரிமையாளரே திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையின் போது, போதையில் வந்த அருண் என்பவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்தனர். அந்த பைக் திடீரென நேற்று மாயமானதால் அதிர்ந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, உரிமையாளர் அருண் பைக்கை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :