சோமாலியாவில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

by Staff / 14-08-2023 03:27:39pm
சோமாலியாவில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சோமாலியாவில் 23 பயங்கரவாதிகளை அந்நாட்டு இராணுவம் சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா நாட்டில் 'அல்-ஷபாப்' பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களை ராணுவத்தினர் அவ்வப்போது ஒடுக்கி வருகின்றனர். அதன்படி, சோமாலியாவின் புலா - புலே என்ற பகுதியில் 'அல்-ஷபாப்' பயங்கரவாதிகள் 23 பேரை சோமாலியா ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டு, கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via