செம்மரம் வெட்டியதாக 48 தமிழர்கள் கைது
ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 பேர் ஆந்திர மாநிலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 48 பேர் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :