இன்ஸ்டாவில் ப்ளாக் செய்ததால் மனைவி கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையில் ஃபாலோவர்களைக் கொண்ட மனைவியைக் கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. 37 வயதான தொழிலதிபருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் தனது மனைவிக்கு ஏராளமான பின்தொடர்பவர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அவரை கொலை செய்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, குழந்தைகள் முன்னிலையில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். கணவனை இன்ஸ்டாகிராமில் ப்ளாக் செய்ததே கொலைக்கான காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :