சிறை கைதி தப்பி ஓட்டம்
திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு செல்லும் வழியில் கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த அமீர் அப்துல் காதர் (22) என்பவர் கடலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார். திண்டிவனம் நீதிமன்றத்தில் நேற்று அமீர் அப்துல் காதர் கொள்ளை வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டார். 2 போலீசாருடன் இருந்த கைதி, கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பி ஓடியுள்ளார். மேலும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags :