பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய மாணவர் கைது

by Staff / 19-08-2023 01:54:11pm
பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய மாணவர் கைது

நாகை மாவட்டம் குறிச்சி ஊராட்சி ஒன்றிய உயா்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். மாணவ, மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது, ஆய்மலைக்கு செல்ல வேண்டிய பேருந்து வரவில்லை. இதையடுத்து மாணவிகள், சாலையில் நடந்தே வீட்டிற்கு சென்றனா்.மேலக்குறிச்சி மதகடி பகுதியில் சென்றபோது மதுபோதையில் அங்கு வந்த 4 இளைஞா்கள், மாணவிகளிடம் அத்துமீறியுள்ளனா். இதை தட்டிக் கேட்ட ஒரு மாணவியின் தாயாரை தள்ளிவிட்டது மட்டுமின்றி மாணவா்களையும் தாக்கியுள்ளனா். இதுகுறித்த புகாரில் வேளாங்கண்ணி போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப்பதிந்து, மேலக் குறிச்சியை சோ்ந்த பாலா என்கிற பாலமுருகனை (25) வியாழக்கிழமை கைது செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனா்.

 

Tags :

Share via