கோடை வெயில்மக்களை பாதுகாக்க களமிறங்கும் அரசியல் கட்சியினர்.காவல்துறை.

by Editor / 27-04-2024 09:39:16am
கோடை வெயில்மக்களை பாதுகாக்க களமிறங்கும் அரசியல் கட்சியினர்.காவல்துறை.

கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில், வெயிலில் வாடும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பேரில் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர். ஏற்க்கனவே திமுக சார்பிலும்,அதிமுக சார்பிலும் நீர் மோர்பந்தல்களை திறக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவும் அந்தப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.காவல்துறையினரை பாதுகாக்க காவல்துறை சார்பில் தினமும் 2 நேரம் குளிர்பானங்கள் வழங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.

 

Tags : கோடை வெயில்மக்களை பாதுகாக்க களமிறங்கும் அரசியல் கட்சியினர்.காவல்துறை.

Share via