பள்ளியில் பூசப்பட்ட மனித மலம்.. அதிரடி காட்டிய காவல்துறை

by Staff / 21-08-2023 11:55:07am
பள்ளியில் பூசப்பட்ட மனித மலம்.. அதிரடி காட்டிய காவல்துறை

திருவள்ளூர் மாவட்த்தில் உள்ள அரசு பள்ளி கதவுகளில் மனித கழிவுகளை பூசிய மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி பள்ளியின் வகுப்பறை இரும்பு கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகள் பூசப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி கதவுகளில் மனித கழிவுகளை பூசிய 12-ஆம் வகுப்பு மாணவனை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via