தனியார் கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அடிக்கடி கல்லூரி வளாகத்தில் மோதிக் கொண்டனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்த போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே திடீரென மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மர்ம கும்பல் திடீரென கல்லூரி வளாகத்துக்குள் 2 நாட்டு வெடிகுண்டை வீசி தப்பி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
Tags :