ஒரு மிகப்பெரிய மாநாட்டை தேமுதிக நடத்த உள்ளது. அதற்கு நிச்சயம் விஜயகாந்த் வருவார்.  பிரேமலதா விஜயகாந்த்

by Editor / 22-08-2023 08:52:04am
ஒரு மிகப்பெரிய மாநாட்டை தேமுதிக நடத்த உள்ளது. அதற்கு நிச்சயம் விஜயகாந்த் வருவார்.  பிரேமலதா விஜயகாந்த்

தேனி அல்லிநகரம் பகுதியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்று தான் போகும் இடமெல்லாம் கேட்கிறார்கள், விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். நம்மோடு நூறு ஆண்டு காலம் இருந்து வழிநடத்துவார். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நல்லவர்கள் வாழ்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ந்ததாக இருக்கக் கூடாது. விஜயகாந்த் போல் நல்லவர்கள் வாழ வேண்டும். அதைப் பார்த்து ஒரு 100 பேர் மக்களுக்கு உதவி செய்வார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாநாட்டை தேமுதிக நடத்த உள்ளது. அதற்கு நிச்சயம் விஜயகாந்த் வருவார். விஜயகாந்த் மறு உருவமாக விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் இருக்கிறார்கள். தொண்டர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. திமுக அரசு தகுதியுள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்று கூறுகிறார்கள். வாக்கு கேட்கும் போது தகுதி பார்த்து பெண்களிடம் வாக்கு கேட்கிறீர்களா.

யார் யார் வீட்டிற்கோ ரைடு செல்கிறார்கள் முதலில் ரைடு செல்ல வேண்டியது அமைச்சர் துரைமுருகனிடம் தான். தமிழ்நாடு அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனையோ ஊழல்கள் செய்து வருகிறார்கள்” இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.இந்தநிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு' என 
மகன் விஜயபிரபாகரன் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்ததி  உள்ளது.

 

Tags : பிரேமலதா விஜயகாந்த்

Share via