படுக்கை அறை காட்சியை பரப்பிய 4 பேர் கைது

by Staff / 24-08-2023 04:37:46pm
படுக்கை அறை காட்சியை பரப்பிய 4 பேர் கைது

கன்னியாகுமரி நித்திரவிளை அருகே கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். அப்பெண்ணுக்கும், வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அந்த வாலிபர் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியது. அதிர்ச்சியடைந்த இளம்பெண் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், அதே ஊரை சேர்ந்த சந்தோஷ் (37), சுமேஷ் (20), நிகேஷ் (20) மற்றும் பிபின் (20) ஆகியோரை நேற்று கைது செய்தனர்

 

Tags :

Share via