தமிழகத்தில் பாஜக வராமலிருக்க அதிமுகவை ஒழிக்க வேண்டும் உதயநிதி
2021ல் - பராளுமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியது போல் 2024-ல் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டும் பெரம்பலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. பெரம்பலூர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள மைதானத்தில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திமுக துணை பொது செயலாளரும் பராளுமன்ற உறுப்பினருமான, ஆ. இராசா தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசும் போது , சேலத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மாநாட்டை வெற்றி மாநாடாக நீங்கள் மாற்றிக்காட்ட வேண்டும். மக்களின் மிக முக்கிய பிரச்சனையான நீட் தேர்வுக்காக அறப்போராட்டம் நடத்தினோம். நீட் தேர்வுக்கு எதிராக போராட ஒரு உதயநிதி போதாது. நீங்கள் அனைவரும் உதயநிதிபோல் செயல்பட வேண்டும் என்றார். 2021-ல் சட்டப் பேரவைத் தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தது போல 2024-ல் அவர்களின் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டும். நாளை நமதே நாற்பதும் நமதே என்பது படி வரும் பாராளுமன்றம், சட்டமன்றத் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார். இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், காசோக கண்ணன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள், இளைஞர்கள் அணி செயல்வீரர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags :