துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை

by Staff / 30-08-2023 01:55:35pm
 துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை

டெல்லியில் பிரபல இணையதள ஷாப்பிங் தளமான அமேசானில் மேலாளராக பணியற்றியவர் ஹர்பிரீத் கில். சம்பவ தினத்தன்று இவர் தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஜன்புரா பகுதியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் ஐந்து பேர் ஹர்பிரீத் கில் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஹர்பிரீத் கில்லின் தலையில் குண்டு பாய்ந்ததில் அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via