கோர விபத்து.. 52 பேர் உடல் கருகி பலி

by Staff / 31-08-2023 12:36:20pm
கோர விபத்து.. 52 பேர் உடல் கருகி பலி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வியாழக்கிழமை அதிகாலை உலகையை சோகத்தில் ஆழ்த்திய பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 52 பேர் உயிருடன் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் அந்நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via