ஒரே நாடு, ஒரே தோ்தல் வந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்

by Staff / 03-09-2023 01:36:17pm
ஒரே நாடு, ஒரே தோ்தல் வந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்

நாமக்கல் நகர, ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் விழா சனிக்கிழமை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, கட்சியில் இணைந்தவா்களை வாழ்த்தி பேசியதாவது: சாதாரண தொண்டனும் உயா்பதவிக்கு வரலாம் என்கிற வாய்ப்பு கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது. தற்போது அதிமுகவில் இணைந்துள்ள 21 முதல் 40 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் பலருக்கு மிகப்பெரிய பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்பு உள்ளது.ஒரே நாடு, ஒரே தோ்தல் வரும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கட்சியில் இணைந்துள்ள இளைஞா்கள் தோ்தலில் அதிமுகவின் வெற்றிக்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்றாா். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ராஜா, மேற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், வகுரம்பட்டி ஊராட்சித் தலைவா் ராஜா ரஹ்மான், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். "

 

Tags :

Share via