தங்கையை அடித்துக் கொன்ற அண்ணன் கைது

by Staff / 04-09-2023 12:13:57pm
தங்கையை அடித்துக் கொன்ற அண்ணன் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குறிச்சி கோட்டையில் தமிழ்ச்செல்வி என்பவர் உடன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் வசித்து வந்தார். தமிழ்ச்செல்வி வலிப்பு நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மனநலம் சரியில்லாமல் இருந்திருந்தால் தெரிகின்றது இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு தமிழ்ச்செல்வி வீட்டுக்குள் இயற்கை உபாதை போனதாக தெரிகிறது இதனால் ஆத்திரமடைந்து அவரது அண்ணன் சக்திவேல் அங்கு இருந்த இரும்புக்கம்பி எடுத்து சகோதரி என்று பாரமால் தாக்கியுள்ளார். சம்பவ இடத்தில் அவர் பலியானார். விரைந்து வந்த தளி போலீசார் தமிழ்செல்வியின் உடலை முன்னிட்டு பிரதே பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவ அனுப்பி வைத்தனர். சக்திவேலை போலீசார் கைது செய்தனர் மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் உடுமலைப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via