தாயும் இல்லை தந்தையும் இல்லை தன்னை பாதுகாக்கும் சித்திக்கும் கணவர் இல்லை பள்ளி மாணவி உதயநிதி ஸ்டாலினிடம் உதவி கேட்டார்.

by Editor / 05-09-2023 10:40:39pm
தாயும் இல்லை தந்தையும் இல்லை தன்னை பாதுகாக்கும் சித்திக்கும் கணவர் இல்லை பள்ளி மாணவி உதயநிதி ஸ்டாலினிடம் உதவி கேட்டார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்காக இன்று காலை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சுமார் இரண்டு மணி அளவில் ஆய்வுகளை முடித்துவிட்டு திரும்பினார். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் மாணவி ஒருவர் கையில் மனுவுடன் காத்திருந்தார். இதனை கண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாகனத்தை உடனடியாக நிறுத்தி அந்த மாணவியிடம் விபரம் கேட்டார் அப்பொழுது அந்த மாணவி தான் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் என்றும், தனது பெயர் அனுஷ்கா என்பதும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியாகவும் உள்ளதாகவும், தன்னை கவனிப்பதற்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை இரண்டு பேரும் காலமாகிவிட்டனர் என்றும், தன்னுடைய சித்தியினுடைய பராமரிப்பில் தான் இருப்பதாகவும் தனது  சித்திக்கும் கணவர் இல்லை என்றும், தனது உடன்பிறந்த சகோதரிகள் 2 பெரும் என குடும்பத்தில் மொத்த மூன்று நபர்கள் இருப்பதாகவும் தங்களுக்கு உதவி வழங்கிட வேண்டும் என்றும் அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். மேலும் கோரிக்கை மனுவையும் அளித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 

Tags : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Share via