தமிழகம் முழுவதும் உதயநிதி மீது புகார் - ஹெச்.ராஜா

by Staff / 06-09-2023 04:50:07pm
தமிழகம் முழுவதும் உதயநிதி மீது புகார் - ஹெச்.ராஜா

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகாரளிக்க உள்ளோம். சனாதனம் குறித்த பேச்சிற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சனாதனம் குறித்து பேசியவர்கள் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via