கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் திருஉருவச் சிலையைதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .

by Admin / 08-09-2023 10:45:12am
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் திருஉருவச் சிலையைதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் திருஉருவச் சிலையை சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .அமைச்சர்கள் சேகர் பாபு,எ. வா. வேலு ,பொன்முடி, கண்ணப்பன் ,மா. சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் ,எம்பி. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோ கலந்து கொண்டு சிறப்பித்தனர்

.கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர் .மேற்கு வங்கத்தைச் சார்ந்த ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி உலகப் புகழ் பெற்ற ஒரு படைப்பு. அதற்காகத்தான் அவர் உலக அளவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார். இலக்கியவாதிகளை போற்ற வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின் உயா்நோக்கத்தின் காரணமாக இத்திரு உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via