கப்பலூர் சுங்கச்சாவடியில் ரூ. 10 கோடிக்கு மேல் ஊழல்- எம்பி மாணிக்கம் தாகூர்

by Staff / 09-09-2023 01:56:08pm
கப்பலூர் சுங்கச்சாவடியில் ரூ. 10 கோடிக்கு மேல் ஊழல்- எம்பி  மாணிக்கம் தாகூர்

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் ரூ. 10 கோடிக்கு மேல் ஊழல்- மாணிக்கம் தாகூர் எம்பி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், தற்போது சிஏஜி அறிக்கையில் வெளிவந்த, ரூபாய் 10 கோடி ஊழல் செய்திருப்பதாக கப்பலூர் சுங்கச்சாவடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் , இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக்கோரி , இத்தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும் , அமைச்சராகவும் இருந்த ஆர். பி. உதயகுமார் , பிரதமர் மோடிக்கு சிபிஐ விசாரணை நடத்தக் கூறி கடிதம் எழுதுவதற்கு தயாரா? என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via