தயிருக்காக சண்டை.. வாடிக்கையாளர் மரணம்

by Staff / 11-09-2023 02:36:53pm
தயிருக்காக சண்டை.. வாடிக்கையாளர் மரணம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கொடூரத்தின் உச்சமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடுதல் தயிர் கேட்ட வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். ஹைதராபாத் பஞ்சாகுட்டாவில் உள்ள மெரிடியன் உணவகத்தில் கூடுதல் தயிர் கேட்டதற்காக லியாகத் என்ற இளைஞரை உணவக ஊழியர்கள் தாக்கினர். மயங்கி விழுந்த லியாகத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதல் நடைபெற்ற போது போலீசாரும் அப்பகுதியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via