தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை

by Staff / 11-09-2023 02:28:13pm
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை

தமிழ்நாட்டில் 2020 - 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பெண்களுக்கு எதிராக கணவர், உறவினர்கள் தொல்லை தருவதாக மொத்தம் 2,931 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு மட்டும் 1,045 வழக்கு பதிவாகியுள்ளது என பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு காவலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், தற்போதைய சூழலில் குடும்ப உறவை சிதைக்கும் கருவியாக மொபைல் போன் உள்ளது என்று கூறப்படுகிறது. பலருக்கும் உறவுகள் குறித்த புரிதல் இல்லை என காவலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

 

Tags :

Share via