தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - காங்கிரஸ்

by Staff / 12-09-2023 12:38:19pm
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - காங்கிரஸ்

இடஒதுக்கீட்டின் பலன்கள் மக்களுக்கு துல்லியமாக சென்றடையதமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கே. எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது பிரதமர் மோடி, இந்தியாவின் பெயரை மாற்றி இருக்கலாம். ஆனால் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் இந்தியா என்று தான் கூறினர். ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்கலாம். நாட்டில் சட்டம், நீதிமன்றங்கள் உள்ளன. அதில் அவரது முயற்சி தோற்கடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via