மகளிர் உரிமைத்தொகை வரவில்லையா

by Staff / 14-09-2023 04:19:58pm
மகளிர் உரிமைத்தொகை வரவில்லையா

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தும் உங்களுக்கு பணம் வரவில்லையா? செப். 18-ம் தேதி முதல் எஸ்.எம்.எஸ். வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளர்கள் கணக்கில் செலுத்தும்பணி இன்று தொடங்கியது. இந்நிலையில், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via