வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 15-09-2023 02:42:30pm
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகேயுள்ள பீக்கிலிபட்டி கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் கவின்குமார்(வயது 25). கட்டிட தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரை தாயார் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கலையரங்கம் அருகே விஷம் குடித்து மயக்கி கிடந்துள்ளார். அவரது உறவினர்கள், நண்பர்கள் அவரை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via