ரயில்வே பெண் போலீஸ் 2 குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

by Editor / 21-09-2023 11:16:25pm
 ரயில்வே பெண் போலீஸ்  2 குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

மதுரையை சேர்ந்த ஜெயலெட்சுமி திருச்சி ரயில்வே பணிக்கு மாறுதல் வழங்கியதால் ஜெயலெட்சுமி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தனது குழந்தைகளான பவித்ரா (11), காளிமுத்து (9) என்ற இரு குழந்தைகளுடன் பெண் போலீஸ் தேனூர் ரயில்வே தண்டவாளத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்., உயிரிழந்த ரயில்வே பெண் போலீஸ் ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  உள்ளனர்.இடம்மாறுதல் வழங்கியதால் பணிச்சுமையால் தற்கொலை என போலீசார் தகவல்.

 

Tags : ரயில்வே பெண் போலீஸ் 2 குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

Share via