உதயநிதி, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

by Staff / 22-09-2023 01:06:38pm
உதயநிதி, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு இருவருக்கும் சனாதன ஒழிப்பு குறித்து பேசியதற்க்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சனாதனத்திற்கு எதிராக சென்னையில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டது அரசியல் சாசன அமைப்புக்கு எதிரானது என்று சென்னையைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உதயநிதியின் பேச்சு எத்தகையது என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via