நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம், நாயக்கனேரிமலை ஊராட்சி மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (58). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று தனது விவசாய நிலத்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில், ஆம்பூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :