ஊராட்சி மணி திட்டம் 26ஆம் தேதி தொடக்கம்
ஊராட்சி மணி திட்டத்தை செப்டம்பர் 26ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஊராட்சிகளில் உள்ள புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி திட்டம் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக ஊராட்சி மணி அழைப்பு எண் சேவை தொடங்கப்படவுள்ளது. ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்ககத்தில் ஊராட்சி மணி அழைப்பு மையம் செயல்படும். ஊராட்சி மணி அழைப்பு மையத்தை வரும் 26ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். 155 340 என்ற அழைப்பு எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
Tags :