ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
சென்னை மெரினா காமராஜர் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ராகுல் மகரனா (வயது 18) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விஜயவாடாவில் இருந்து ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் ஆட்டோ மூலம் கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரி சிவாவிடம் ஒப்படைக்க வேண்டி ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.
Tags :