கணவனை பிரிந்த மகள் தந்தை விபரீத முடிவு

by Staff / 25-09-2023 04:18:16pm
கணவனை பிரிந்த மகள் தந்தை விபரீத முடிவு

ஈரோடு, பெரியசேமூர், கல்லான்கரட்டை சேர்ந்தவர் கருப்புசாமி, 45, கட்டட மேஸ்திரி. இவரின் மகள் சவுந்தர்யா, 20; மனைவியின் தம் பிக்கு திருமணம் செய்து வைத்தார்.ஆனால், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பெற்றோர் வீட்டுக்கு சவுந் தர்யா வந்து விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கருப்புசாமி, மதுவுக்கு அடிமையானார். தினமும் மது குடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு போதையில், வீட்டில் சேலையில் தூக்கிட்டு கொண்டார்.மனைவி வளர்மதி, அக்கம்பக்கத்தினர்இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உதவியுடன் கருப்புசாமியை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர். மகள் கணவனை பிரிந்த வேதனையால், தந்தை தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

 

Tags :

Share via