மதுவில் விஷம் கலந்து குடித்தவர் மரணம்.

by Staff / 27-09-2023 03:47:32pm
மதுவில் விஷம் கலந்து குடித்தவர் மரணம்.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (53) என்பவர் மதுவுக்கு அடிமையானவராக இருந்துள்ளார். சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த நிலையில் வீட்டில் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு கரையான் மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via