உதயநிதியை பதவிநீக்கம் செய்ய கோரிக்கை
சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிசத் தேசிய செயல்தலைவர் அலோக்குமார், தமிழக ஆளுநர் ரவியிடம் மனு அளித்துள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்றது அமைச்சர்களின் பொறுப்பற்ற செயல் என சாடிய இந்து அமைப்பினர், அமைச்சரின் பேச்சு வெறுப்பை பரப்பவும், பகைமையை உருவாக்கவும் கூடியது என அச்சம் தெரிவித்தனர். மேலும் இது இது நேரடியாக அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் கூறினர்.
Tags :