கனமழை கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

by Editor / 03-10-2023 08:41:38am
கனமழை கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் இன்று காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்படி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஶ்ரீதர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்காசி, நெல்லை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : கனமழை கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Share via