48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழப்பு

by Staff / 03-10-2023 12:28:01pm
48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் நான்டெட் அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 16 குழந்தைகள் உள்ளனர். நேற்று 24 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களில் 12 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாத காரணத்தாலும், மருந்து பற்றாக்குறையாலும் இந்த உயிரிழப்புகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via