அதிர்ச்சி... திடீர் தாக்குதல்.. 29 ராணுவ வீரர்கள் பலி

by Staff / 04-10-2023 12:09:22pm
அதிர்ச்சி... திடீர் தாக்குதல்.. 29 ராணுவ வீரர்கள் பலி

நைஜரில் நேற்று இரவு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்நாட்டு கிளர்ச்சி நடந்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் அங்குள்ள அதிபர் முகமது பாசும் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். அதிலிருந்து அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தபடோல் பகுதியில் ராணுவத்தினர் நேற்று இரவு ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை எதிர்பார்த்து அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 29 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.

 

Tags :

Share via