பிரதமர் மோடியை மிரட்டிய காலிஸ்தான் பயங்கரவாதி

by Staff / 11-10-2023 12:08:45pm
 பிரதமர் மோடியை மிரட்டிய காலிஸ்தான் பயங்கரவாதி

பஞ்சாப்பை தொடர்ந்து ஆக்கிரமித்து வந்தால் ஹமாஸ் அமைப்பு போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படும் என்று பிரதமர் மோடிக்கு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் எச்சரிக்கை விடுத்துள்ள நிகழ்வு பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. காலிஸ்தான் ஆதரவாளரும், சீக்கியர்களின் எஸ்.எப்.ஜே (SFJ) தலைவருமான குர்பத்வந்த் சிங், இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதிகளால் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று இந்தியாவும் தாக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். .அதன்படி, “இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இருந்து இந்தியாவும், பிரதமர் மோடியும் பாடம் கற்க வேண்டும். பாலஸ்தீனத்தைப் போல பஞ்சாப் மக்களும் சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via