விவாகரத்து நினைத்துப்பார்க்க முடியாத வலியாக இருந்தது மெலிண்டா பிரஞ்ச்

by Staff / 05-10-2022 03:32:03pm
விவாகரத்து நினைத்துப்பார்க்க முடியாத வலியாக இருந்தது மெலிண்டா பிரஞ்ச்

உலக பெரும்பணக்காரரான பில்கேட்சுக்கும், மெலிண்டா பிரஞ்ச் என்பவருக்கும் கடந்த 1994ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில், பில்கேட்சின் முன்னாள் மனைவி மெலிண்டா நேற்று அமெரிக்காவின் பிரபல செய்தி நாளிதழ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "திருமண உறவில் நீடிக்காததற்கு சில காரணங்கள் இருந்தன. பில்கேட்சிடமிருந்து விவாகரத்து பெற பல வழிகளில் நினைத்துப்பார்க்க முடியாத வலியாக இருந்தது. ஆனால், அதை கடந்து செல்ல எனக்கு தனியுரிமை இருந்தது. நான் விலகிச்சென்ற நபரிடம் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தவேண்டும்" என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

 

Tags :

Share via