பட்டதாரி பெண் பாலியல் பலாத்காரம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டதாரி இளம்பெண் (27). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். தாய் விபத்தில் இறந்து விட்டார். தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர், 12ஆம் தேதி இரவு 7 மணியளவில் கோவிலுக்குச் செல்வதாக கூறிச் சென்றவர், 9 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது முகத்தில் வீக்கம் இருந்ததால், அவரது அக்கா விசாரித்த போது, அங்குள்ள ரைஸ்மில் வழியாக வந்த போது, அடையாளம் தெரியாத நபர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதுபற்றி திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Tags :