தரமற்ற நெல்குடேன் கட்டுமானம் விவசாயிகள் குற்றசாட்டு.

by Editor / 19-10-2023 10:27:37pm
தரமற்ற நெல்குடேன் கட்டுமானம் விவசாயிகள் குற்றசாட்டு.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்திலிருந்து-சாம்பவர் வடகரை செல்லும் சாலையில் பெரியகுளத்தின் கீழ்ப்புறம் அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சுமார் 55 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தற்பொழுது பில்லர்கள் அமைக்கப்பட்டு சுவர்கள் காட்டும் பணிகள் நடந்துவருகின்றன.பில்லர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அதில் இரண்டு துண்டுகளாக ஒன்றோடு ஒன்று சரியாக இணைக்காமல் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் கட்டிடம் தரமாக இருக்காது என்றும் எதிர்காலத்தில் மழை மற்றும் புயல் மழை காலங்களில் கட்டிடங்கள் சேதம் அடைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நெல் குடோன் கட்டுமான பணிகளை அதிகாரிகள் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு அதனை மீண்டும் புனரமைத்து கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் கோரிக்கையைவிடுத்துள்ளனர் அந்தப்பகுதிமக்கள்.அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு இந்த கட்டிடம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் பல ஆண்டுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் தற்பொழுது திமுக ஆட்சி காலத்தில் தான் இந்த நெல்கொள்முதல் நிலையம் கட்டப்ப்டுவதாகவும்,அதுவும் முதலும் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலையில் கட்டப்பட்டுவருவதாகவும், திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கும் வண்ணமாக இந்த கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாகவும் அந்தப் பகுதி விவசாய பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

Tags : தரமற்ற நெல்குடேன் கட்டுமானம் விவசாயிகள் குற்றசாட்டு.

Share via