இந்தியாவில் 2 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ்

by Staff / 14-04-2024 02:47:13pm
இந்தியாவில் 2 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ்

இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் கணக்குகளை எக்ஸ் நிறுவனம் முடக்கியுள்ளது. மார்ச் மாதத்தில், குழந்தை பாலியல் வன்கொடுமை, ஆபாசம் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2,12,627 கணக்குகள் தடை செய்யப்பட்டன. புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின், அதற்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via