சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

by Staff / 21-10-2023 12:52:54pm
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இன்று , காங்கேர் மாவட்டத்தில் உள்ள கோயிலிபேடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோம் காட்டுப் பகுதியில் இருந்து இரண்டு மாவோயிஸ்டுகளின் சடலங்களை மாவட்ட ரிசர்வ் காவலர்கள் மீட்டனர். சம்பவ இடத்தில் இருந்து ஐஎன்எஸ்ஏ ரக துப்பாக்கி மற்றும் 12 போர் ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via