ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், நாளை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கம். இதனைமுன்னிட்டு நாளை, தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு, அரசு உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இதற்காக தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் நாளை பள்ளிகளுக்கு வர வேண்டுமெனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags : ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு