புதிய வீடுகள் கட்டிக் கொடுத்த கனிமொழி எம்பி

by Staff / 24-10-2023 04:32:18pm
புதிய வீடுகள் கட்டிக் கொடுத்த கனிமொழி எம்பி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தத்தெடுத்துள்ள தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில், 1996 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. சிதிலமடைந்திருந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு வேண்டும் என்று கனிமொழி எம். பி. யிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, கனிமொழி எம். பியின் முயற்சியால், (என்டிடி குளோபல் டேட்டா மையங்கள் & கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை) தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 80 இலட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து, புது வீடுகள் கட்டும் கட்டுமான பணிகளை ஏற்பாடு செய்தார். கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவுபெற்ற 9 வீடுகளைக் கனிமொழி கருணாநிதி எம். பி பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், ஆட்சியர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2022 ஏப்ரல் தேதி பஞ்சாயத்துராஜ் திட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்புக் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி. அந்தக் கிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும் நோக்கில் தத்தெடுப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via