ஷீரடி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி

by Staff / 26-10-2023 04:28:08pm
ஷீரடி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். சாய்பாபா கோயிலில் வழிபாடுகளுக்குப் பிறகு, புதிய தரிசன வரிசை வளாகம் அக்டோபர் 26 ஆம் தேதி இன்று திறக்கப்பட்டது. பிரதமருடன் மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கோவில் தரிசனத்தில் உடனிருந்தனர். சுமார் ரூ. 7,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

 

Tags :

Share via