அமர் பிரசாத் ரெட்டியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் வைக்கப்பட்ட கொடி கம்பத்தை அகற்றியபோது, போராட்டத்தில் ஈடுபட்ட அமர் பிரசாத் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு நவம்பர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது. இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு மேலும், 7 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே செஸ் உலக போட்டியின்போது தமிழ்நாடு அரசு செய்த விளம்பரத்தில் அத்துமீறி மோடியின் ஸ்டிக்கர் ஒட்டிய வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :